
- News18
- Last Updated: February 03, 2020, 11:45 IST
12-ம் வகுப்பிற்கான செய்முறை பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இதில் 8,00,000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்ட அடிப்படையில் இன்று துவங்கி 13-ம் தேதி வரை 2 கட்டங்களாக செய்முறை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
செய்முறைத்தேர்வு முதற்கட்டமாக 3-ம் தேதி முதல் 7 -ம் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையிலும் நடத்தப்படுகின்றது.
பகுதி வாரியாக காலை மற்றும் பிற்பகலில் இயற்பியல்,வேதியியல், உயிரிவியல், தாவரவியல்,
விலங்கியல் மற்றும் கலை பிரிவு, தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 8,00,000 மாணவர்கள் செய்முறை பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். செய்முறைத் தேர்வின் மூலம் மாணவர்களுக்கு25 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also see...