
- News18 Tamil
- Last Updated: June 02, 2020, 16:07 IST
திருச்சி மாவட்டம் மணியங்குறிச்சியைச் சேர்ந்த ஜோதிடர் பெரியசாமி, வசிய மை தயாரிப்பு குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 9 மாதங்களுக்கு முன் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், உடும்பை பிடித்து அதன் உறுப்புகளை தனி தனியாக அறுத்து காய வைத்து வசிய மை தயாரிப்பதாக பெரியசாமி கூறியுள்ளார்.
\1\6ALSO READ : இரவு தூங்கும் முன் பால் குடிப்பது ஆபத்தா..?
இது வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அண்மையில் சென்றுள்ளது. உடனடியாக, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 4 நாட்களுக்கு முன் திருமணம் முடிந்து, மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற பெரியசாமியை, அவசரமாக ஜோதிடம் பார்க்க வேண்டுமென கூறி வரவழைத்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube